Tuesday, November 23, 2010

மறவாமல் இருக்க...

மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க...
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க...
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க...

Monday, November 22, 2010

பிறந்த நாள்...

நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...

உன்னைப்போல...!

நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!

கூடாது...

நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...

அழகு...

கல்லறை கூட
அழகாகத் தெரியும்
உண்மையான காதல்
அங்கு உறங்கும் போது...

ஜென்மம்...

பார்க்க கண்கள் வேண்டும்...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...

சுமப்பதற்காக.

மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!

கண்ணீர்...

முதியோர் இல்லத்தில்
ஒரு தாயின் கண்ணீர்...!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்...
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை...
உன் வீட்டில்...

முடியாது...

காரணம் இல்லாமல்
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது...

என்றுமே அழகு...

தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
சொல்லாத காதலும்...
கலையாத கனவும்...
என்றுமே அழகு தான்...!

மறந்து...

என் முன்னால்
எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்...!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்... என்பதையும்
மறந்து...!

நட்பு

உறவு முறை
இல்லாத உறவே
நட்பு...

உன் அன்புக்காக...

காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும்...
என் உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக...!

துணை

நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...!

ஆயுள்

பூக்களுக்கு ஒரு நாள்
தான் ஆயுள்
ஆனால், அதையும் பறித்து
பூஜை செய்கிறான்
மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!

சொந்தம்

ஆயிரம் சொந்தம் நம்மை
தேடி வரும்...
ஆனால், தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்...

Wednesday, May 12, 2010

அன்பு

அன்பு என்பது ஒரு கோவில்
அதில், ஆசை என்பது ஒரு தீபம்
ஆசை என்னும் தீபம் அழிந்தாலும்...
அன்பு என்னும் தீபம் அழிவதில்லை...!

ரோஜாச்செடி

ரோஜாச்செடியில்
முள்ளும் இருக்கும்
மலரும் இருக்கும்
முள்ளை பார்த்து பயந்து விடாதே...!
மலரை பார்த்து மயங்கி விடாதே...!

பிரிவு

அன்பே!
பிரிவென்ற வலைக்குள்
நாம் சிக்கிக்கொண்ட போதும்
நினைக்க நினைக்க இனிக்கும்
உன் நினைவுகளில் தான்
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...!
கடல் கடந்து,
மலை தாண்டி,
பாலைவனத்திற்கு
பறந்து வந்த போதும்
நமக்கிடையே உள்ளதென்னவோ
மூச்சுக்காற்று முட்டுகிற தூரம் தான்...!

சரித்திரம்

நமது பிறப்பு
ஒரு சம்பவமாக இருக்கலாம்...!
ஆனால், நமது இறப்பு
ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...!

கல்லறை வரை

கனவு என்பது
காலை வரை... ஆனால்,
உன் நினைவு என்பது
என் கல்லறை வரை...!

நினைவு

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு...!
ஆனால், என்னுள்
உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!

காதல்

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

ஆயிரம் முறை ...

பலமுறை யோசித்தேன்
ஏன்? இந்த பூமியில் பிறந்தேன் என்று!
ஒரு முறை யோசித்தேன்
உன்னோடு பழகும் போது
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று!

நினைவுகளை

பிறக்கும் போது
நான் எதையும் கொண்டு வரவில்லை...
ஆனால், இறக்கும் போது
கண்டிப்பாக கொண்டு செல்வேன்...
பாசமான உங்கள்
நினைவுகளை...!

நட்பின் மரணம்

உதிரும் மலருக்கு கூட
ஒரு நாள் தான் மரணம்...
ஆனால், நட்பின் பிரிவிற்கு
தினம் தினம் மரணம்...!

பாசம்

பூவை விட உன்னை அதிகமாக
நேசிக்கிறேன்! ஏன் என்றால்?
பூவுக்கு வாசம் அதிகம்...!
உனக்கு பாசம் அதிகம்...!

நினைவு நாள்

உன் நினைவு
இல்லாத நாள்
என் நினைவு நாள்...!

பிரிவு

பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
பிரிவு...!

அன்பு

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!

மறவாமல் இருக்க ...

மலருக்கும் ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...!
எனக்கும் ஆசை
நீ என்னை மறவாமல் இருக்க...!

சிரிப்பவர்கள்

சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி
வாழ்பவர்கள் இல்லை...!
கவலைகளை மறக்க
கற்று கொண்டவர்கள்...!

கவலை

நீ உன் நண்பர்களிடம் பேசும் போது
என்னை மறந்து விடுகிறாய்...
-இப்படிக்கு கவலைகள்!

பிரிவது ஏப்படி ?

கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...!
என் உயிரோடு நீ கலந்ததால்
உன்னை பிரிவது எப்படி?

நம்பிக்கை

நீ சுமக்கின்ற நம்பிக்கை
நீ கீழே விழும் போது
உன்னை சுமக்கும்...!

பாசம்

நீ அருகில் இருக்கும் போது
பாசம் என்றால் என்ன என்றே
புரிவதில்லை...!
உன்னை பிரிந்திருக்கும் போது
பாசத்தை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!

Monday, May 10, 2010

மௌனம்

நீ பேசும் வார்த்தை
எல்லோருக்கும் புரியும்...!
ஆனால் ,நீ பேசாத மௌனம்
உன்னை நேசிப்பவர்களுக்கு
மட்டுமே புரியும்...!

அருகில் இல்லாததால் ...

நீ அருகில் இருந்த போது
அடி பட்ட காயத்தின் வலி கூட
தெரியவில்லை ...!
நீ அருகில் இல்லாததால்
இதயத்தின் துடிப்பு கூட
வலிக்கிறது ...!

தனிமை

எல்லோரும் என் அருகில்
இருக்கும் போதும்
தனிமையை உணர்கிறேன்
நீ என் அருகில் இல்லாததால்...!

உன் நினைவுகளுடன் ...

என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன் ...!

வலி

என் கைகளில் முட்கள்
குத்திய போது கூட
எனக்கு வலிக்கவில்லை...
ஆனால், அவள் என் கைகளை
உதறி விட்டு சென்ற போது
வலித்தது ...!
கைகள் அல்ல,
என் இதயம்...!

நினைவுகள்

நான் மட்டும் அல்ல,
நீ துடித்த என் கைக்குட்டையும்
சுமக்கின்றது
உன் நினைவுகளை...!

தொலைக்காதே !

பார்த்தவுடன் பழகாதே...!
பழகியவுடன் இணையாதே...!
இணைந்தவுடன் பிரியாதே...!
பிரிந்தவுடன் வருந்தாதே...!
வருந்தியவுடன் தேடாதே...!
தேடி கிடைத்தால்,
மீண்டும் தொலைக்காதே...!

ஒரு நிமிடம் ...

உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து விடும்...!

Sunday, May 9, 2010

அன்பு

விடியும் வரை தெரியாது
கண்டது கனவு என்று...
அன்பும் அப்படி தான்,
பிரியும் வரை தெரியாது
அன்பு எவ்வளவு
ஆழமானது என்று ...!

பெருமை

உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலை படாதே...!
நீ அவர்களுக்கு
இரண்டு அடி முன்னால் இருக்கிறாய்
என்று பெருமை படு...!

உண்மையான அன்பு

உண்மையான அன்பை
மற்றவர்களுக்கு கொடுத்து பார்...
அதை விட அதிகமான அன்பை
ஒரு நாள் அவர்களிடம் இருந்து நீ பெறுவாய்...!

மறக்க முடியாது ...

யாருக்காக சிரித்தாயோ
அவர்களை நீ மறந்து விடலாம்...
ஆனால், யாருக்காக அழுதாயோ
அவர்களை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது!

வாழ்க்கை

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!

உறவுகள்

எந்த உறவாக இருந்தாலும், அதில்
உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே
நீங்கள் விலகி நின்றாலும்
உங்களை விரும்பி வரும்...

கலக்கம்

தூசி பட்ட கண்களும்...
நண்பர்களை பிரிந்த இதயமும்...
எப்போதும் கலங்கிக்கொண்டே இருக்கும்!

சுமை

விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது...!

நினைவுகள்

நீ இருப்பதோ வெகு தூரம்...
ஆனால், உன் நினைவுகளோ!
என் விழி ஓரம்...!

மலர்கள்

காலை முதல் மாலை வரை சிரித்தேன்...!
பரிசாக கிடைத்தது
மரண தண்டனை...
-இப்படிக்கு மலர்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை வெற்றியோடு வரும்...!
ஆனால், வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்... !

இதயம்

வாசித்த கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!

முயற்சி

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்ததை
முடிக்கும் வரை ...

அம்மா

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....
ஆனால், சொல்ல முடியவில்லை
கடவுளே !எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு...
அவளை அம்மா என்று அழைக்க!

நீ இருந்தால் ...

சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும்
நான் உயிர் வாழ்வேன் ...!
நேசிக்க நீ இருந்தால்...!

நிலா

நான் உன்னை பார்க்க தான் வருகிறேன்
ஆனால், ஏனோ நான் போகும் வரை
இமைகளை நீ திறப்பதில்லை...
-வருத்தத்துடன் நிலா!

நிலவு

நிலவின் ஒரு துண்டு
உன் புன்னகை என்றேன்...
நீ சிரித்த பின்பு தான் தெரிந்தது
உன் புன்னகையில் சிந்திய
ஒரு துளி தான்
நிலவு என்று !

உன்னை நேசித்தால்

காற்றும் இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும் கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால்...
இந்த உலகமே உனதாகும்
நீ உன்னை நேசித்தால்...

மறக்க முடியாமல் ...

என்னை விட்டு சென்ற அவளை
இன்னும் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்.
அவளை மறக்க முடியாமல் அல்ல,
இன்னொருவளை
நினைக்க தெரியாமல்...

இதயத்துடிப்பு

அவள் என் மார்பில்
சாய்ந்து உறங்கி கொண்டிருக்கிறாள்
ஒரு பக்கம் சந்தோஷம்...
ஒரு பக்கம் வேதனை...
எங்கு என் இதயத்துடிப்பு
அவளை எழுப்பி விடுமோ என்று !

என் நினைவில்...

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்...
கண்ணில் கனவுகள் இருந்தாலும் ...
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும் ...
என்றும் என் நினைவில்
நீ இருப்பாய்!

பாசம்

கவிதைகளை வாசிப்பது மட்டும்
அல்ல, நேசிப்பதும் சுகம் தான்
ஆம் !நான் நேசிக்கும்
அழகான கவிதை
உன்னுடைய பாசம்...

புன்னகை

புன்னகை என்ற முகவரி
உன்னிடம் இருந்தால்
அன்பு என்ற கடிதம்
உனக்கு வந்து கொண்டே இருக்கும் ...

பிரிவு

உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும் ஒரு அழகான
சந்தர்ப்பம் தான்
பிரிவு !

ஆன்மா

கண்ணுக்குள் நீ இருக்க
கண் மூட மறுக்கிறேன் ...
கனவிலும் நீ வருவாயா?
கண் திறந்தே உறங்குகிறேன் ...
விழி மூடி விட்டாலும்
விட்டு போகாதே ...
விழி நீர் கொட்டியே
விலகி விடும் என் ஆன்மா !

வாழ்வின் ரகசியம்

நாம் யாருக்காக வாழ்கிறோம்
என்று நமக்கு தெரியும்...
ஆனால், நமக்காக யார் வாழ்கிறார்கள்
என்று நமக்கு தெரிவதில்லை...

தாஜ்மஹால்

இந்த உலகம் என்னை போல
உண்மையான காதலர்களை காணும் வரை
என் கல்லறை ( தாஜ்மஹால் ) என்றும்
ஓர் உலக அதிசயமே !

நம்மைப்பற்றி

மற்றவர்கள் நம்மை பற்றி
என்ன நினைத்தாலும்
அதற்கு நாம் பொறுப்பு அல்ல...
ஆனால், அவர்கள் நம்மை பற்றி
எப்படி நினைக்க வேண்டும் என்பதற்கு
முழு பொறுப்பும் நாம் தான்...

பாரமில்லை...

விழியோடு கண்ணீர் வழிகின்ற போதும்
மனதோடு சுமந்த உன்னை
பாரமென்றுஇறக்க மாட்டேன் ...

Saturday, May 8, 2010

பாசம்

என் மனதிற்குள் இருக்கும் பாசம்
என் மரணம் வரை
உன்னிடம் பேசும் !

தாய்

தாய் என்று சொல்லும் போதே சுரக்கிறது கண்ணீர்
அவள் அன்பிற்கு இந்த உலகில் ஈடு இணை ஏது?
சலிப்பில்லாத பாசத்தை கொடுக்கும் வல்லமை
அந்த தெய்வத்திற்கு மட்டுமே...

நட்பு

மலர்கள் மலர்வது
உதிர தான் என்றால்...
நமது நட்பு
மொட்டாகவே இருக்கட்டும் !

நீ வாடினால் ...

செடி வாடினால் தண்ணீர் விடுவேன் ...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்...
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.

நினைவுகள்

என்னோடு நீ இருந்தாலும்,
இல்லை என்றாலும்,
மண்ணோடு புதையும் வரை
என்னோடு வைத்திருப்பேன்...
உன் நினைவுகளை!

புன்னகை

செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும்
புன்னகை தான் அழகு ...

ரோஜாவின் கண்ணீர்

பன்னீர் வாசனை தான்
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்
அது ரோஜாவின் கண்ணீர் என்று !

உயிர்

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ?
என்று எனக்கு தெரியாது...
ஆனால், உனக்கு அழுகை
வந்தாலே என் உயிர் போய் விடும்.

குடை

நீ கடற்கரை மணலில் அமர்ந்திருந்தால்
உனக்காக இரண்டு குடைகள் கொண்டு வருவேன்...
ஒன்று உனக்கு!
மற்றொன்று,
உன்னுடைய நிழலுக்கு !

உண்மையான அன்பு

உன் நிழல் கூட
வெளிச்சம் உள்ள வரை தான்
துணைக்கு வரும் !
உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்!

நினைவுகள்

துடிக்கும் இதயம் நின்று போகலாம்
ஆனால் ,நின்ற இதயம் கூட மீண்டும் துடிக்கும்
உன் அழகான நினைவுகள் இருந்தால் !

அன்பு

புரியாத அன்பிற்கு
அருகில் இருந்தும்
பயன் இல்லை...
புரிந்து கொண்ட அன்பிற்கு
பிரிவு ஒரு
தூரமில்லை !

வெற்றி

காயம் இல்லாமல் கனவுகள் காணலாம்
ஆனால்,வலி இல்லாமல்
வெற்றிகள் காணமுடியாது!

நண்பர்கள்

உலகம் என்னை பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று ,
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள் தான்
என் உலகம் என்று !

வாழ்க்கை

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !

நினைவுகள்

பிரிந்து இருந்தாலும்
மறந்து இருப்போம்
பிரிவுகளை மட்டுமே
நினைவுகளை அல்ல ...

உன் பெயர்

உன் பெயரை கடல் ஓரத்தில் எழுதி வைத்தேன் ...
அலைகள் வந்து எடுத்து சென்றது ...
முத்துக்கள் என எண்ணி ...

நேசம்

காற்றும்
இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும்
கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால் ...
இந்த உலகமே
அழகாகும்
நீ என் நட்பை நேசித்தால்...

தூக்கம் ...

கண்கள் தூங்கலாம் ...
கனவுகள் தூங்க கூடாது ...

அருகில் இல்லாத நிமிடம் ...

நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது ...
உன்னை போலவே உன் நினைவுகளும் சுகமானது ...
நீ அருகில் இல்லை என்றாலும்
உன் நினைவுகள் என்னிடம் என்றும் இருக்கும் ...

நரகம்

யாரையும் அதிகமாக
நேசித்துவிடாதே ...
அவர்கள் நம்மிடம் பேசாத
ஒவ்வொரு நிமிடமும்
நரகமாக மாறி விடும்...

மறந்தாலும் ...

நினைக்க மறந்தாலும் ...
மறக்க நினைக்காதே ...

நினைவுகள்

நேசிக்கும் உறவுகள் பிரிந்து
சென்றாலும் ...
நேசித்த நினைவுகள் என்றும்
நிலைத்திருக்கும் ...