Sunday, September 6, 2009

மனித காட்சி சாலை

இங்கு மிருகங்கள் வந்து போகின்றன
மனிதர்களை பார்க்க!
முதியோர் இல்லங்கள்

சமாதானம்

நான் இறந்த உடன்
என் சடலத்தை பார்த்து கூட அழுது விடாதே
சட்டென்று எழுந்து விடுவேன்
உன்னை சமாதான படுத்த!

உறவுகள்

உறவுகள் பிரியலாம் ஒன்றென
கலந்த உள்ளங்கள் பிரியாது!

நிஜம்

தூண்டிலில் சிக்கிய மீனும்
உன் அன்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்
மீன் துடிப்பதுவிடுதலைக்காக
நான் துடிப்பது உன் நட்பிற்காக!

மறந்துவிட

உன்னை மறந்து விட ஒரு போதும்
என் மனம் நினைக்காது மறந்து விட
நினைத்தால் என் இதயம் துடிக்காது!

ஆசை

உன் நட்பில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல
யிர் பிரியும் வரை!

இடைவெளி

இதயம் கூட இடைவெளி
விட்டுதான் துடிக்கும்
அந்த இடைவெளி கூட
உன்னை பற்றி தான் நினைக்கும்!

இழப்பு

உனக்காக எல்லாவற்றையும் இழந்தேன்
நீ என்னையும் இழப்பாய் என்று தெரியாமல்!

நாடி துடிப்பு

நேசம் என்பது நினைக்கும் வரை
பாசம் என்பது பழகும் வரை
நட்பு என்பது நாடி துடிப்பு நிற்கும் வரை!

Saturday, September 5, 2009

நட்பு

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர் விட்டது தீக்குச்சி
அதை நினைத்து நினைத்து
உருகியது மெழுகுவர்த்தி!