Sunday, April 24, 2011

நேசம்

நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!

உயிராக

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...! மட்டும் அல்ல
உயிராக...!

சுவாசம்

பூக்கள் என்றால் வாசம்...!
காதல் என்றால் நேசம்...!
அம்மா என்றால் பாசம்..!
ஆனால் ...
உங்களுடைய நட்பு என்றால்
என் சுவாசம்...!

உயிராக...

உன் அன்பை
உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்...!
ஆனால்...
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்...!

கண் உறங்கு...

உலகுக்கு ஒளி தரும்
சூரியனே
உறங்க சென்று விட்டது...!
என்
உயிருக்கு ஒளி தரும்
நட்பே நீ மட்டும்
ஏன் விழித்திருக்கிறாய்?
போய் கண் உறங்கு...!

Friday, April 22, 2011

பிரிவு

உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

நண்பன்

உங்கள் நினைவில்
நான் வந்தால்
நான் உங்கள் நண்பன்...
உங்கள் கனவில்
நான் வந்தால்
நான் உங்கள் உயிர் நண்பன் ...

உன் அன்புக்காக...

காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும் ...
என உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக ...!

Thursday, April 21, 2011

பிரிவு

நான் திரும்பாத
பயணம் என மரணம்...
அது வரை
நான் விரும்பாத
பயணம் உன் பிரிவு...

நட்பு

நான் ஒரு கண்ணாடி
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு

நினைவுகள்

நினைவோடு தான்
பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம்
என்றால்?
உன் நினைவுகள்
என்னை தூங்க விடுவதில்லை...!

நேசம்

உயிர் இல்லாத
மலரைக்கூட
அவள் நேசிக்கின்றாள்!
ஆனால்...
அவளுக்காக உயிர் கொடுக்கும
என்னை மட்டும் ஏன்
நேசிக்க யோசிக்கின்றாள் ?

காரணம்

காரணம் இல்லாமல்
யார் மீதும்
அன்பு வருவதில்லை...
ஆனால் ...
அந்த காரணம் தான்
யாருக்கும் புரிவதில்லை ...!

நேசம்

வெறுப்பவர்கள்
யாராக இருந்தாலும்...!
நேசிப்பவர்கள்
நாமாக இருப்போம்...!

நேசம்

கலங்கிய கண்களை
நேசி ....
ஆனால் ...
நேசித்த கண்களை
கலங்க வைக்காதே...!

துணிச்சல்

ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
இறந்து விடலாம்...!
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
ஜெயித்து விடலாம்...!

அர்த்தம்

அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த எனக்கு...
அவள் பேசிய
வார்த்தைக்கு அர்த்தம்
தெரியவில்லை ?

முடிவு

யோசனை யாரிடம்
வேண்டுமானாலும் கேள்...!
ஆனால்...
முடிவை நீ மட்டும் எடு .

உணர்ந்தேன் ...

நீ என்னிடம்
பேசியதை விட...
எனக்காகப் பேசியதில்
தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...!

எப்படி முடியும் ?

உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல் இடைவிடாது
ஓடிக்கொண்டிருக்கும் போது
எப்படி உன்னை
மறக்க முடியும்...?

பிரிவு

உன்னால் மட்டுமே முடியும்!
இதயத்திற்கு இதமான
அன்பும் கொடுத்து
பிரிவு என்னும்
இடியும் கொடுக்க .

எப்படி ?

எப்படி மறந்தாய்?
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க...!

புன்னகை

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்...!
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம் எனக்குள் ...!

நேரம்

நேரம் போவது
தெரியாமல் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கையில்...
ஒரே ஒரு கவலை எனக்கு...!
ஏன் இந்த நேரம்
ஓடிக் கொண்டிருக்கிறது என்று ?

சம்மதம்

நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்...
சம்மதம் மட்டும் சொல் !
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்...!

மௌனம்

என்னைக் கொல்ல
வாள் வேண்டாம்...
உன் ஒரு நொடி
மௌனம் போதும்.

தலைவலி

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன...
என் தலைவலிகள்...!

மொழிகள்

தமிழ் முதல்
சீனம் வரை
பல மொழிகள் புரிகிறது...
உன் விழிகள் பேசும்
வார்த்தை மட்டும்
புரியவில்லை...!

மீனவன்

மீன் சாப்பிடக்கூடாது
என்றிருந்தேன்...
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக...

திருமணம்

கனவே கலையாதே
கடைசி சந்திப்பு
நிகழட்டும் விடிந்தால்
காதலிக்கு திருமணம்...!

பிரிவு

நீ பிரிந்து சென்ற பின்
உன் நினைவுகளை
எப்படி செலவழிக்க ...
காகிதங்களில் கவிதையாகவா ?
கண்களில் கவிதையாகவா?

தாய் தந்தை

தோள் கொடுக்க தோழனும்...
தோள் சாய தோழியும் ...
கிடைத்தால் அவர்கள் கூட
தாய் தந்தை தான் ...!

புன்னகை

பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்...!
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்...!

இதயத்தில்...

உன்னை பார்க்க அடம் பிடிக்கும்
என் விழிகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்?
நீ என் இதயத்தில்
இருக்கிறாய்...! என்று

சுவாசிப்பது

காற்றுக்கு
என் மீது கோபம்...
காரணம் கேட்டேன்...!
அதற்கு காற்று சொன்னது
சுவாசிப்பது என்னை
நேசிப்பது உன்
நண்பர்களையா? என்று ...!

நட்பு

நட்பு என்பது
காற்று போன்றது!
இருப்பது நமக்குத் தெரியாது...
இல்லாமல் நம்மால்
இருக்க முடியாது!

நட்பு

N - நம்பிக்கை
A - அன்பு
T - தியாகம்
P - பாசம்
U - உண்மை

மலர்

பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்...
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும்
சிரித்துக் கொண்டே இருங்கள்...!

இரவு வணக்கம்

பனி துளிகள்
மறைந்து கொண்டு இருக்க...
உன் நினைவுகள் என்னுள்
மலர்ந்து கொண்டு இருக்க...
என்னை நேசிக்கும்
அன்பான உள்ளத்திற்கு
இரவு வணக்கம்...!

வெற்றி

வெற்றி வரும் வரை
குதிரை வேகத்தில் ஓடு...
வெற்றி வந்த பிறகு
குதிரையை விட வேகமாக ஓடு...
அப்போதுதான்...!
வெற்றி உன்னிடம்
நிலைத்திருக்கும்.

இதயத்தில்...

இதயத்தில்
அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்...!
உன் அன்பு தான்
என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க முடியும்?

உனக்காக...

இமை மூடும் நேரத்தில்
இதயம் சொல்லும்...
நீ உறங்கு!
நான் உறங்காமல்
உனக்காக துடிக்கிறேன் என்று...

கற்றுக்கொள்...

அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
ஆனால்...
ஒவ்வொருவரிடம் இருந்தும்
கற்றுக்கொள்...!

உயிராக...

உன் அன்பை உண்மையாக நேசிக்க
பல பேர் இருக்கலாம்...
ஆனால்...
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்...!

நட்பு

உனக்கும் எனக்கும்
உள்ள நட்பு
சூரியனுக்கும்
சூரியகாந்தி பூவுக்கும்
உள்ளது போல...
நீ உதிக்காமல்
நான் மலர மாட்டேன்...!

இலட்சியம்

கவலையை நினைத்து
கண்ணீர் சிந்துவதை விட...
இலட்சியத்தை நினைத்து
இரத்தம் சிந்துவதே மேல்...!

தோழி

அழகான இரவு நேரம் ...
கண்கள் உறங்கும் நேரம்...
கனவுகள் மலரும் நேரம் ...
உறவுகள் சொல்லாவிட்டாலும் ...
நான் உரிமையோடு சொல்கிறேன் ...!
தோழி நீ சென்று உறங்கு.